ஷா ஆலம், டிச 12 - இன்று மாலை 5 மணி வரை சிலாங்கூரில் உள்ள 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
இதே வானிலைதான் பெர்லிஸ், மலாக்கா, கெடா, பேராக், திரங்கானு, பகாங், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், ஜோகூர், லாபுவான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை தெரிவித்தது.
பொதுமக்கள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தை நாடலாம்.


