குவாந்தான், டிச 10: முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட உணவக உரிமையாளர் ஒருவர் RM783,000 இழந்தார்.
இந்தச் சலுகையால் ஈர்க்கப்பட்ட 30 வயதான பாதிக்கப்பட்டவரை சந்தேக நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு RM550 முதல் RM600 வரை தினசரி வருமானம் உறுதியளிக்கப்பட்டதாகவும் பகாங் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் தெரிவித்தார்.
தனிப்பட்ட சேமிப்பு, வணிக சேமிப்பு, குடும்பத்தாரிடம் பெற்ற கடன் மற்றும் நகை விற்றதன் மூலம் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி அக்டோபர் 20 முதல் டிசம்பர் 7 வரை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 23 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்ததாக அவர் கூறினார்.
“இருப்பினும், பணம் செலுத்திய பிறகு, பாதிக்கப்பட்டவர் இலாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. ஆனால், கூடுதல் பணம் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்,” என்று அஸ்ரி அக்மர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர் ஜெரண்டுட் மாவட்டக் காவல் தலைமையகத்தில் புகார் அளித்ததாகவும், இந்த வழக்கு தண்டனைச் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அஸ்ரி கூறினார்.
- பெர்னாமா


