ஷா ஆலாம், டிச 5- சபா மாநில கனிமவள உரிமத்தைப் பெறுவதற்காக தொழிலதிபர் ஆல்பர்ட் டேய், பிரதமர் அன்வாரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஶ்ரீ ஷம்சூல் இஸ்கண்டாரிடம் RM 64,924 ரிங்கிட் பணத்தை லஞ்சமாக கொடுத்ததாக மற்றொரு ஊழல் வழக்கு அவர் மீது கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை 37 வயதான தொழிலதிபர் ஆல்பர்ட் டேய் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த 2023, நவம்பர் 28 மற்றும் 2024, செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் காஜாங், கன்ட்ரி ஹைட்ஸ் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தொழிலதிபர் ஆல்பர்ட் டேய், ஷம்சூல் இஸ்கண்டாரிடம் RM 62,9244 ஊழல் குற்றத்தை புரிந்தார்.
வீட்டு வாடகைக்கு பணம் செலுத்துவதாக எனும் பெயரில் இந்த பணம் ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் செக்ஷன் 17 ஏ இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை, வழங்கிய லஞ்சப்பணத்தை விட ஐந்து மடங்கு கூடுதல் அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.


