இளைஞர்களுக்கான வயது வரம்பை 30ஆகக் குறைத்தாலும், அதற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசாங்க உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்

1 டிசம்பர் 2025, 8:13 AM
இளைஞர்களுக்கான வயது வரம்பை 30ஆகக் குறைத்தாலும், அதற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசாங்க உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்
கோலாலம்பூர், டிச 1 — இளைஞர்களுக்கான வயது வரம்பை 30ஆகக் குறைக்கும் திருத்தம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர இருப்பினும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அனைத்து அரசாங்க உதவிகளும் தொடர்ந்தும் வழங்கப்படும்.
இளைஞர் வயது வரம்பு குறைப்புக்குப் பிறகு அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் உதவிகளை ஒருங்கிணைப்பது குறித்த கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.  
“அவர்கள் இனி ‘இளைஞர்கள்’ என்ற வகைப்படுத்தலில் இருக்காவிட்டாலும், உதவி அவர்களுக்கு செல்லும் வகையில் நாங்கள் உறுதி செய்வோம். உதாரணமாக, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டு அமைப்புகள் அமைச்சகம் 30 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்குகிறது. அவர்கள் இன்னும் இந்த நிதிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
“வேளாண்மைத் துறையிலும் இளம் விவசாயர்களுக்கான சிறப்பு உதவித்தொகைகள் தொடருவதை உறுதி செய்வோம்,” என்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது விளக்கினார்.
இளைஞர் வயது வரம்பை 30 ஆகக் குறைக்கும் நடவடிக்கை, 2019 ஆம் ஆண்டின் இளைஞர் அமைப்புகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க எடுக்கப்பட்டது
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.