லாரியை ஓட்டிச் சென்ற 21 வயதுக்கும் குறைவான இளைஞர் தடுத்து வைப்பு

2 ஜனவரி 2026, 9:22 AM
லாரியை ஓட்டிச் சென்ற 21 வயதுக்கும் குறைவான இளைஞர் தடுத்து வைப்பு

ஷா ஆலம், ஜன 2: நேற்று ஷா ஆலம் செல்லும் கத்ரி நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் (KM) 18 அருகே சாலைப் போக்குவரத்துத் துறையால் (JPJ) சரக்கு லாரியை ஓட்டிச் சென்ற 21 வயதுக்கும் குறைவான இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எல்மினா அமலாக்க நிலையத்தின் (SPK) அமலாக்க அதிகாரிகளால் வழக்கமான ஆய்வின் போது சம்பந்தப்பட்ட ஓட்டுநரை தடுத்து வைத்ததாக சிலாங்கூர் ஜே.பி.ஜே இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை எட்டாத நிலையில் கனரக வாகனத்தை ஓட்டுதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான சுமையை லாரியில் ஏற்றி சென்றது உள்ளிட்ட பல குற்றங்களை அந்த இளைஞர் செய்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"ஓட்டுநர் இல்லாததால், தனது மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலின் பேரில் லாரியை ஓட்டி வந்ததாக அந்நபர் கூறினார்.

சம்பந்தப்பட்ட லாரி ஷா ஆலமுக்கு பொருட்களை இறக்குவதற்காக சென்று கொண்டிருந்ததாக அஸ்ரின் கூறினார்.

அதைத் தொடர்ந்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக எல்மினா சிறப்பு காவல் நிலையத்திற்கு அனுப்பியதாக அவர் கூறினார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.