ad

நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்

18 நவம்பர் 2025, 6:55 AM
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்

கோலாலம்பூர், நவம்பர் 18 —நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 134,916 நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில், 97,329 நபர்கள் அதாவது 72.15 சதவீதம் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாகக் அவர் கூறினார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில், குறிப்பாக இளைஞர்களிடையே, தடுப்பு, அமலாக்கம், மீட்பு திட்டத்தின் கீழ் பல முயற்சிகள் மெற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை குறிவைத்து பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.