ad

INFLUENZA A தொற்றினால் 4 வயது குழந்தை பலி; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

12 அக்டோபர் 2025, 7:16 AM
INFLUENZA A தொற்றினால் 4 வயது குழந்தை பலி; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

புத்ராஜெயா, அக்டோபர் 12 - சரவாக், சமரஹானைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை, Influenza A தொற்றினால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வக சோதனைகளில், அக்குழந்தைக்கு Influenza A தொற்று இருப்பது காட்டினாலும் அடையாளம் காணப்பட்ட முதன்மை சிக்கலில் மூளை வீக்கத்தினால் ஏற்பட்ட வலிப்பே என்று சுகாதார அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

''ஆய்வக சோதனையில், Influenza A தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முக்கிய சிக்கல் மூளை வீக்கம். மூளைக்காய்ச்சலின் விளைவாக வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. இது வேறு பல கிருமிகளாலும் ஏற்படலாம். எனவே, Influenza A என்று உறுதியாகக் கூற முடியாது. தற்காலிக நோயறிதலில் அப்படி தான் கூறப்பட்டுள்ளது. எனவே, இறுதி நோயறிதலுக்காக காத்திருப்போம்'', என்றார் அவர்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு டாக்டர் சுல்கிஃப்ளி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.