மெட்ரிட், ஆகஸ்ட் 5 - ஸ்பெயின், மெட்ரிட்டிலிருந்து பாரீசுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று பெரியப் பறவை கூட்டத்தை மோதியதால் அது புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
அந்த விமானம் 182 பயணிகளுடன் நடுவானில் பயணித்து கொண்டிருந்த போது இச்சமபவம் நிகழ்ந்துள்ளது.
எனினும், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இச்சம்பவத்தில், அப்புதிய Airbus A321XLR விமானத்தில் சில பகுதிகள் சேதமடைந்தன. அவ்விமானம் சேவையில் ஈடுபடத் தொடங்கி சில வாரங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


