SELANGOR

மறுசுழற்சி வழி பணம் பெறும் திட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

17 ஜூலை 2025, 4:55 AM
மறுசுழற்சி வழி பணம் பெறும் திட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 17: இந்த ஞாயிற்றுக்கிழமை, கெராமட், ஜாலான் AU4/11இல் உள்ள AU4 பொது மண்டபத்தில் மறுசுழற்சி (Trash To Cash) திட்டத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அருகிலுள்ள குடியிருப்பாளர்களைஅம்பாங் ஜெயா நகராண்மை கழகம் முகநூல் வழியாக அழைக்கிறது.

"இந்த முயற்சி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், உள்ளூர்வாசிகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்" என்று அவர் கூறினார்.

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் பின்வருமாறு:

1. பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் சேகரிப்பு (ஒரு கிலோகிராமுக்கு RM2)

2. மின் / மின்னணு கழிவுகளின் சேகரிப்பு (RM0.20/கிலோகிராம்)

3.அலுமினிய கேன்கள் RM1/கிலோகிராம், பெட்டிகள், காகிதம், பிளாஸ்டிக் RM0.20/கிலோகிராம் மற்றும் இரும்பு RM0.40/கிலோகிராம்

இந்தத் திட்டம் மண்டலம் 3 இன் பிரதிநிதியான ரோஸ்மயானா அபு ரஹீமால் ஒருங்கிணைக்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு ம் 03-4285 7390 என்ற எண்ணில் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் மறுசுழற்சி பிரிவை தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.