SELANGOR

அனிஸ் மையத்தை 12 பிபிடிகளில் விரிவுபடுத்த சிலாங்கூர் பரிசீலனை

17 ஜனவரி 2025, 8:07 AM
அனிஸ் மையத்தை 12 பிபிடிகளில் விரிவுபடுத்த சிலாங்கூர் பரிசீலனை

ஷா ஆலம், ஜன 17: சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மையத்தை (அனிஸ் மையம்) 12 பிபிடிகளில் விரிவுபடுத்த சிலாங்கூர் மாநிலம் எண்ணம் கொண்டுள்ளது.

இந்நடவடிக்கை தற்போதுள்ள மையங்களில் மாணவர்களின் நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.

"தற்போதுள்ள அனிஸ் மையத்தில் சுமார் 120 மாணவர்கள் கல்வி கற்கலாம். ஆனால், அதற்கு 600 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

"இதற்கு ஏற்கனவே உள்ள மையங்களை ஒருங்கிணைக்க முடியாது, ஏனெனில் சில நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்

"இந்த ஆண்டு புறநகரில் உள்ளவர்கள் இந்த திட்டத்தை அணுகக்கூடிய வகையில் ஒரு நடமாடும் தலையீட்டு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த திட்டத்தை தொடங்க தற்போதுள்ள ஒதுக்கீட்டைப் பரிசீலிப்போம்," என்று அவர் கூறினார்.

அனிஸ் மையம் என்பது சிறப்பு கண்காணிப்பு தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு ஏற்பாடு செய்த ஒரு திட்டமாகும்.

இத்திட்டத்தை தொடர 2025 பட்ஜெட்டில் RM2.3 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.