SELANGOR

பொதுச் சந்தையை மேம்படுத்த RM400,000 ஒதுக்கீடு

15 ஜனவரி 2025, 9:44 AM
பொதுச் சந்தையை மேம்படுத்த RM400,000 ஒதுக்கீடு

காஜாங், ஜன. 15: பண்டார் பாரு பாங்கி,செக்ஷன் 1இல் உள்ள பொதுச் சந்தை வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மேம்படுத்தப்படும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திடமிருந்து (KPKT) RM400,000 ஒதுக்கீட்டைப் பெற்று, கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட மேம்பாடு பணிகள் இந்த பிப்ரவரியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சியாஹ்ரெட்ஸான் தெரிவித்தார்.

90 களில் திறக்கப்பட்ட இச்சந்தையில் டைல்ஸ் நிறுவுதல், மேற்கூரையை மாற்றுதல் மற்றும் பகுதியைச் சுற்றி மீண்டும் நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

"மேம்படுத்தும் பணி 26 வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாது, ஏனெனில் அவர்கள் வழக்கம் போல் வியாபாரம் செய்யலாம்," என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.