SELANGOR

3,000 மாணவர்களுக்கு இணைய அம்சத்துடன் கூடிய இலவச சிம் கார்ட்

15 ஜனவரி 2025, 6:04 AM
3,000 மாணவர்களுக்கு இணைய அம்சத்துடன் கூடிய இலவச சிம் கார்ட்

ஷா ஆலம், ஜன 15: சிலாங்கூரில் மொத்தம் 3,000 மாணவர்கள் தங்கள் படிப்பை மேற்கொள்ள இலவச இணைய அம்சத்துடன் கூடிய வாடிக்கையாளர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பெறுவார்கள்.

இந்த திட்டம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்று எம்பிஐ தலைவர் தெரிவித்தார்.

"இத்திட்டம் குறிப்பாக சிலாங்கூர் மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இணைய இணைப்பை கொண்டுள்ள இந்த சிம் கார்ட் கற்றலை எளிதாக்கும் மற்றும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

"இந்த திட்டம் இணைய சிக்கலை தீர்க்க முடியும். இது பெறுநர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,800 மாணவர்கள் இந்த ஆண்டு எம்பிஐ வழங்கும் பள்ளிக் கல்வி உதவியைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.