SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் மூன்று ஆலயங்களில் பொங்கல் விழா

6 ஜனவரி 2025, 4:07 AM
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் மூன்று ஆலயங்களில் பொங்கல் விழா

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜன. 6 - கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இவ்வாண்டு

பொங்கல் விழா தொகுதியிலுள்ள மூன்று ஆலயங்களில் வெகு சிறப்பாக

நடைபெறவுள்ளது.

இம்மாதம் 14ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு ஆலம் மேகா, ஸ்ரீ மகா முத்து

மாரியம்மன் ஆலயத்திலும் 15ஆம் கோத்தா கோத்தா கெமுனிங், ஸ்ரீ மகா

மாரியம்மன் ஆலயத்திலும் 16ஆம் தேதி தாமான் ஸ்ரீமூடா ஸ்ரீ சுவர்ண

மகா மாரியம்மன் ஆலயத்திலும் இந்த பொங்கல் விழா நடைபெறும்.

தமிழர்களின் உழவர் திருநாளான இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு

நமது பாரம்பரியம் மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்

சம்புநாதன் கூறினார்.

இந்த பொங்கல் நிகழ்வில் வட்டார மக்கள் திரளாகக் கலந்து

சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.