SELANGOR

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசாங்கம் 500,000 ரிங்கிட்டை வழங்கியது

3 ஜனவரி 2025, 5:56 AM
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசாங்கம் 500,000 ரிங்கிட்டை வழங்கியது

கோத்தா பாரு, ஜன 3: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கிளந்தான் அரசாங்கத்திடம் 500,000 ரிங்கிட்டை டத்தோ மந்திரி புசார் வழங்கினார்.

இந்த நன்கொடையை கிளந்தான் மந்திரி புசார் டத்தோ முகமட் நசுருடின் தாவிடம் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒப்படைத்தார்.

பரஸ்பர புரிதல் மற்றும் கருணை உணர்வின் அடையாளமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

"சக மாநில அரசாங்கங்கள் ஒருவருக்கொருவர் உதவும் கலாச்சாரத்தை வளர்க்க விரும்புகிறோம். இந்த நன்கொடையின் மூலம் கிளந்தனில் மீட்பு செயல்முறைக்கு உதவ முடியும் என்று நம்புகிறோம்," என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், எப்போதும் கிளந்தானுக்கு உதவும் சிலாங்கூர் அரசாங்கத்தின் அக்கறைக்கு மொஹமட் நசுருடின் நன்றி தெரிவித்தார்.

"மாநிலங்களுக்கு இடையே இதுபோன்ற உதவி என்பது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன் எந்த மாநிலம் பேரிடரால் பாதிக்கப்பட்டாலும், மற்ற மாநிலங்கள் கண்டிப்பாக உதவிகளை வழங்கும். சிலாங்கூர் அரசுக்கு மிக்க நன்றி, என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.