Budget

நிலுவையில் உள்ள மத்திய அரசாங்கத்துடனான கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் - சிலாங்கூர் அரசாங்கம்

10 நவம்பர் 2023, 8:30 AM
நிலுவையில் உள்ள மத்திய அரசாங்கத்துடனான கடன் முழுமையாகத் திருப்பிச்  செலுத்தப்படும் - சிலாங்கூர் அரசாங்கம்

ஷா ஆலம், நவ 10: சிலாங்கூர் அரசாங்கம் அதன் நிலுவையில் உள்ள 2024ஆம்

ஆண்டிற்கான மத்திய அரசாங்கத்துடனான கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும்

என்று எதிர்பார்க்கப்படுகிறது

மீதமுள்ள கடன் தொகையான RM19.20 மில்லியன் நீர் வழங்கல் திட்டம் மற்றும்

சிலாங்கூர் பங்கு அறக்கட்டளைத் திட்டம் (ASAS) ஆகியவற்றின் கடன்களை

உள்ளடக்கியது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

2024 ஆம் ஆண்டில் மாநிலத்தின் கடன் பொறுப்பைத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பும்

குறைவாக இருப்பதாகவும், ``ASAS`` திட்டத்தின் இறுதித் தவணையான RM1.89

மில்லியனைத் தீர்த்து வைப்பதை மட்டுமே உள்ளடக்கியதாகவும் அவர் விளக்கினார்.

நீர் வழங்கல் திட்டக் கடனில் மீதமுள்ள RM17.3 மில்லியன் பெங்குருசன் அசெட் ஆயர்

பெர்ஹாட் (PAAB) நிறுவனத்திற்கு மாற்றப்படும் மற்றும் அதற்கான ஆவணங்கள் மட்டுமே

தேவைப்படும் என்றார்.

நிதி சுதந்திரத்தின் இந்த நன்மையுடன், மாநில பட்ஜெட் 2024 மூலம் சிலாங்கூர்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சேவைகளின் விரைவு தனை

பாதிக்கப்படாமல் நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதில் சிறந்த நிர்வாகத்தை மாநில அரசு

நிரூபித்துள்ளது  என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.