ஷா ஆலாம், 15 நவம்பர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜெலாஜா ஜாப்கேர் தொழில் வாய்ப்பு கார்னிவல் மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் சான்றிதழ் வழங்கும் பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் வளர்ப்பு முயற்சிகளும் சேர்க்கப்படுகின்றன.
சிலாங்கூர் 2026 பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, வேலை இல்லா நிலையை சமாளிக்கும் இந்தத் திட்டத்திற்காக RM1 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளதாக மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். மேலும் மின்துறை, மின்னணு சாதனங்கள், அரைமூலம் தொழில்நுட்பம், போக்குவரத்து உபகரணங்கள், ஆற்றல், இலத்திர தொடர்பு ஆகிய துறைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த மாநிலம் செயற்படுகின்றது. அதேசமயம், எதிர்கால உயிரியல் அறிவியல் துறையையும் ஆராயும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூரினார்.
இவ்வாண்டு தொடங்கப்பட்ட சிலாங்கூர் தொழில் முன்னேற்ற இணைப்பு திட்டம் (SCOUT) கல்வி நிலையங்கள், தொழில் துறைகள் மற்றும் பட்டதாரிகளை இணைத்து, பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறும் திறனை உயர்த்தும் நோக்கில் செயல்படுகின்றது. “இந்த ஆண்டு, பொறியியல் துறையில் 260 மாணவர்கள் இந்த திட்டத்திலிருந்து பயன் பெற்றுள்ளனர்.




