HEALTH

டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

2 மார்ச் 2023, 11:39 AM
டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

புத்ராஜெயா, மார்ச் 2: இந்த ஆண்டில் எட்டாவது தொற்றுநோய் வாரத்தில் (ME8/23), ஜனவரி 19 முதல் பிப்ரவரி 25 வரை டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,145 ஆகக் குறைந்துள்ளது (0.2 சதவீதம்).

டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வாரத்தில் டிங்கி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

இன்றுவரை டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,388 ஆக உள்ளது (212.8 சதவீதம்) மற்றும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன.

"மேலும், இந்த வாரம் (ME8/23) மொத்தம் 66 ஹாட்ஸ்பாட் இடங்கள் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறினார்.

அவை சிலாங்கூரில் 40, சபாவில் 15, பினாங்கில் 5, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நான்கு மற்றும் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் தலா ஒன்று.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.