HEALTH

நாட்டில் நேற்று 206 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

1 மார்ச் 2023, 3:05 AM
நாட்டில் நேற்று 206 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

ஷா ஆலம், மார்ச் 1- நாட்டில் நேற்று 206 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஐந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம் நேற்று பதிவு செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

புதிதாகப் பதிவான மரணச் சம்பவத்துடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,956ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 9,277 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 8,901 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 340 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏழு நோயாளிகள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் மூவருக்குச் செயற்கைச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 176 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 96 ஆயிரத்து 761ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.