ECONOMY

கைகலப்புக்குப் பின்னர் ஆடவரைக் காரில் மோதிக் கொன்ற இரு நபர்களை போலீஸ் தேடுகிறது

17 பிப்ரவரி 2023, 8:14 AM
கைகலப்புக்குப் பின்னர் ஆடவரைக் காரில் மோதிக் கொன்ற இரு நபர்களை போலீஸ் தேடுகிறது

ஷா ஆலம், பிப் 17- உள்நாட்டு ஆடவர் ஒருவரை காரில் மோதிக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் கிள்ளான், அம்பாங் பொட்டானிக் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.00 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தின் போது 32 வயது ஆடவர் பி.எம்.டபள்யூ. காரினால் மோதித் தள்ளப்பட்டு சுமார் சுமார் 40 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹோங் ஃபூங் கூறினார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவரகள் என நம்பப்படும் எஸ்.சுந்தர் (வயது 33) மற்றும் எஸ். பிலிப் அந்தோணி (வயது 24) ஆகிய இருவரையும் தாங்கள் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

பண்டார் பொட்டானிக்கில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சம்பந்தப்பட்ட நபர் காரினால் மோதித் தள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான், அம்பாங் பொட்டானிக் பகுதியில் கார் ஒன்றினால் மோதப்பட்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவர் அதிகாலை 6.30 மணியளவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் எனினும், அந்நபர் இறந்து விட்டது சோதனையில் தெரிய வந்ததாகவும் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக ஏசிபி ச்சா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிலாங்கூர்  மாநில போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில் விசாரணைக்கு உதவக்கூடிய பல பொருள்கள் சம்பவ இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டன என்றார் அவர்.

அவ்விரு சந்தேகப் பேர்வழிகள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 03-33762222 என்ற எண்களில் விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. முகமது சைட் ரோபார்ட் சைட் முகமது ஜைனுடன் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.