ECONOMY

பயனீட்டாளர்களின் உரிமையை காக்க சட்டத் திருத்தம்- நீரை மாசுபடுத்துவோருக்கு வெ.1 கோடி அபராதம்

16 பிப்ரவரி 2023, 11:03 AM
பயனீட்டாளர்களின் உரிமையை காக்க சட்டத் திருத்தம்- நீரை மாசுபடுத்துவோருக்கு வெ.1 கோடி அபராதம்

ஷா ஆலம், பிப் 16- நீரை மாசுபடுத்துவோருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீர் விநியோகத்தை சீர் செய்வதற்கு உண்டாகும் செலவுத் தொகையை வாடிக்கையாளர்களும் நீர் விநியோக லைசென்ஸ் உரிமையாளர்களும் சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து கோருவதற்கு ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.

நீர் மாசுபாடு பாதிக்கப்படும் பயனீட்டாளர்களின் உரிமையை பாதுகாப்பதற்காக 2006ஆம் ஆண்டு தொழில் துறை சேவை சட்டத்தில் (சட்டம் 655) திருத்தம் செய்யப்படுவதாக அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.

இதன் தொடர்பான சட்டத் திருத்த மசோதா வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறிய அவர், நீர் விநியோகத்தில் தடை ஏற்படுவதற்கு காரணமான தரப்பினரை தண்டிப்பதற்கு வகை செய்யும் புதிய தண்டனைகளும் அமல் இதில் சேர்க்கப்படும் என்றார்.

மாசுபாடு காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கு உண்டாகும் செலவை நீர் விநியோக லைசென்ஸ் உரிமையாளர்களும்  பொது மக்களும் இந்த பாதிப்புக்கு காரணமான தரப்பினரிடம் கோருவதற்கு 655 சட்டத்தின் 121 மற்றும் 122 பிரிவுகள் வகை செய்கின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

மக்களவையில் இன்று செத்தியவங்சா உறுப்பினர்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.