HEALTH

நேற்று 164 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு –ஒருவர் மரணம்

14 பிப்ரவரி 2023, 4:40 AM
நேற்று 164 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு –ஒருவர் மரணம்

ஷா ஆலம், பிப் 14- நாட்டில் நேற்று 164 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டது.

நேற்று முன்தினம் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164ஆக இருந்தது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.இந்நோய்க்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 36,952ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 9,310 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 96.4 விழுக்காட்டினர் அல்லது 8,978 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 321 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில 11 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.