HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 160 பேர் பாதிப்பு –மரணச் சம்பவம் பதிவாகவில்லை

13 பிப்ரவரி 2023, 7:22 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 160 பேர் பாதிப்பு –மரணச் சம்பவம் பதிவாகவில்லை

ஷா ஆலம், பிப் 13- நாட்டில் நேற்று 160 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஒன்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடமிருந்து கண்டறியப்பட்டது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகவில்லை. இந்நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 36,951ஆக இருந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி மொத்த 9,401 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 96.5 விழுக்காட்டினர் அல்லது 9,068 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்பது பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில நால்வருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று 358 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 93 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.