HEALTH

நாட்டில் புதிதாக 255 கோவிட் -19 சம்பவங்கள்

11 பிப்ரவரி 2023, 8:26 AM
நாட்டில் புதிதாக 255 கோவிட் -19 சம்பவங்கள்

ஷா ஆலம், பிப் 11: வெள்ளிக்கிழமை நாட்டில் மொத்தம் 255 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் மூன்று வெளிநாட்டவர் களிடமிருந்து கண்டறியப்பட்டன. கோவிட் -19 மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 5,039,067 ஆக உள்ளது.

``KKMNow`` போர்ட்டலில் உள்ள மலேசியச் சுகாதார அமைச்சகத்தின் (KKM) தரவுகளின் அடிப்படையில், கோவிட்-19 காரணமாக நான்கு புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மலேசியாவில் கோவிட்-19 காரணமாக மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36,950 ஆக உள்ளது.

நாட்டில் கோவிட்-19 தொற்று நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,992,386 சம்பவங்களாக உள்ளது என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) எந்த நோயாளிகளும் வைக்கப் படவில்லை. அதே நேரத்தில் 327 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்றனர், அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.