HEALTH

கோவிட்-19: நேற்று 367 பேர் பாதிப்பு, 9 பேர் மரணம் 

12 ஜனவரி 2023, 4:39 AM
கோவிட்-19: நேற்று 367 பேர் பாதிப்பு, 9 பேர் மரணம் 

ஷா ஆலம், டிச 12- நாட்டில் நேற்று 367 பேருக்கு புதிதாக கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது. அவர்களில் இருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒன்பது மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கே.கே.எம். நாவ் அகப்பக்கம் கூறியது. இதனுடன் சேர்ந்து நாட்டில் இந்நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,901ஆக உயர்வு கண்டுள்ளது.

மொத்தம் 11,372 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 10,846 பேர் அல்லது 95.4 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் 502 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 12 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று 398 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டனர். இதனுடன் சேர்த்து இதுவரை இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 83 ஆயிரத்து 170 ஆக ஆகியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.