ECONOMY

ஒரு நாளைக்கு இரண்டு முதல் 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்

20 டிசம்பர் 2022, 6:54 AM
ஒரு நாளைக்கு இரண்டு முதல் 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்

ஷா ஆலம், டிச 20: விலையைக் கட்டுப்படுத்துவதுடன் உள்ளூர் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த வியாழக்கிழமை முதல் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்.

டிசம்பர் 15 அன்று 100,000 முட்டைகளின் இறக்குமதி தொடக்கத்துடன் இந்த நடவடிக்கை தொடங்கியது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"எனவே, டிசம்பர் 15 முதல் 100,000 முட்டைகளை இறக்குமதி செய்வதன் வழி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம், டிசம்பர் 22 முதல் நிலைமை சீராகும் வரை, உள்ளூர் உற்பத்தி திறனுக்கான உத்தரவாதம் அளிக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் 10 மில்லியன் முட்டைகள் கொண்டுவரப்படும்," என்று அவர் கூறினார்.

டிசம்பர் 6 ஆம் தேதி, மேலாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் சந்தையில் கோழி முட்டைகள் பற்றாக்குறையை ஈடுகட்ட குறுகிய கால நடவடிக்கையாக சில வெளிப்புற ஆதாரங்களை அடையாளம் கண்டுள்ளது.

பெறப்படும் பொருட்கள் நோயிலிருந்து பாதுகாப்பாகவும், நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்வதிலும் தனது தரப்பு சமரசம் செய்யாது என்று அதன் அமைச்சர் முகமது சாபு தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.