HEALTH

நாட்டில் நேற்று 1,241 கோவிட்-19 சம்வங்கள் பதிவு- அறுவர் மரணம்

15 டிசம்பர் 2022, 4:33 AM
நாட்டில் நேற்று 1,241 கோவிட்-19 சம்வங்கள் பதிவு- அறுவர் மரணம்

ஷா ஆலம், டிச 15- நாட்டில் நேற்று 1,241 கோவிட்-19 நோய்த் தொற்று

சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் மூன்று வெளிநாடுகளிலிருந்து

வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் தீவிர நோய் பாதிப்பை எதிர்

நோக்கியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 17,215 ஆகப்

பதிவாகியுள்ளது.

தீவிர தாக்கத்தைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகளில் 93.7

விழுக்காட்டினர் அல்லது 16,138 பேர் வீடுகளில்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நோயிலிருந்து நேற்று 1,567 பேர் குணமடைந்த வேளையில் இந்நோய்த்

தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 59 ஆயிரத்து

725ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய ஆறு மரணச் சம்பவங்கள்

நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்குப் பலியானவர்களின்

எண்ணிக்கை 36,787 ஆக அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.