HEALTH

நாட்டில் நேற்று 1,040 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- 9 பேர் மரணம்

14 டிசம்பர் 2022, 5:28 AM
நாட்டில் நேற்று 1,040 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- 9 பேர் மரணம்

ஷா ஆலம், டிச 14 - நாட்டில் நேற்று 1,040 கோவிட்-19 சம்பவங்கள்

பதிவாகின. இந்நோய்த் தொற்றுடன் தொடர்புடைய 9 மரணச்

சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன.

நேற்றையத் தொற்றுகளுன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த்

தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 12 ஆயிரத்து

483 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சிலாங்கூரில் மிக அதிகமாக 335 பேரும் சரவாக்கில் 111 பேரும்

கோலாலம்பூரில் 89 பேரும் இந்நோயினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார

அமைச்சின் கோவிட்-19 அகப்பக்கம் கூறியது.

நாட்டில் நேற்று 1,456 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த

எண்ணிக்கை 49 லட்சத்து 58 ஆயிரத்து 525ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய மரணச் சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த்

தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,778 ஆக

உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று 17,547 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின்

தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 28 பேர் தீவிர

சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 18 பேருக்குச்

செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.