ECONOMY

ஐகான் அக்ரோ சிலாங்கூர் 2022 டிசம்பர் 19 அன்று தொடங்குகிறது, ரிம 10,000 பரிசு வழங்கப்படுகிறது

14 டிசம்பர் 2022, 4:49 AM
ஐகான் அக்ரோ சிலாங்கூர் 2022 டிசம்பர் 19 அன்று தொடங்குகிறது, ரிம 10,000 பரிசு வழங்கப்படுகிறது

ஷா ஆலம், டிச. 14: சிலாங்கூர் அக்ரோ ஐகான் திட்டம் மூன்றாவது முறையாக டிசம்பர் 19 முதல் தொடரும் என்று விவசாய எக்ஸ்கோ தெரிவித்துள்ளது.

மாநிலத்தை உணவு விநியோக மையமாக மாற்றும் போட்டியில் விவசாய உபகரணங்களுடன் RM10,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று ஐஆர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் வேளாண் சுற்றுலா என ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.

"இந்த திட்டம் வெற்றிகரமாக நவீன விவசாயத்தில் மேற்கொண்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும். மக்களை அதிக அளவில் தொழில் துறையில் ஈடுபட ஊக்குவித்து, மாநிலத்தை எப்போதும் முன்னோக்கிக் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

இப்போட்டியில் பங்கு பெற அடுத்த ஜனவரி 16-ம் தேதி வரை பதிவு செய்ய முடியும். பங்கேற்பதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:

-சிலாங்கூரில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்

- 18 வயது மற்றும் அதற்கும் மேல்

-நிறுவனம் அதன் சொந்த பெயரில் பதிவு செய்யப்பட்டு சிலாங்கூரில் செயல்பட வேண்டும்

-மூன்று முழுமையான ஆண்டுகளுக்கான நிதி அறிக்கைகள்

-சங்கங்கள் மற்றும் கூட்டுறவுகள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப் படுகின்றன

விவசாயத் துறையில் 10 வெற்றிகரமான ஐகான் களுக்கு வழங்கும் இந்த விருது 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, 2021 லும் தொடர்ந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நீண்ட காலத்திற்கு உணவு விநியோகத்தில் சீரான பங்களிப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மாநில விவசாயக் குழு உறுப்பினர்களால் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுவார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.