HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 866 ஆக குறைந்தது- 10 பேர் மரணம்

12 டிசம்பர் 2022, 5:13 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 866 ஆக குறைந்தது- 10 பேர் மரணம்

ஷா ஆலம், டிச 12- நாட்டில் நேற்று 866 கோவிட்-19 சம்பவங்கள்

பதிவாகின. இவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவர் மூலம்

அடையாளம் காணப்பட்டது.

இந்த நோய்த் தொற்றினால் நேற்று பத்து பேர் உயிரிழந்தாக சுகாதார

அமைச்சன் கே.கே.எம்.நாவ் அகப்பக்கம் கூறியது. அவர்களில் இருவர்

மருத்துவமனை கொண்டு வரப்படுவதற்கு முன்னரே உயிரிழந்தனர்.

நேற்றைய மரணச் சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த்

தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,763 ஆக

உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று 18,721 கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர

பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர். அவர்களில் 17,408 பேர் அல்லது 93

விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 78 பேர்

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 50 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

நேற்று 1,313 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டனர். இதனுடன்

சேர்த்து இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49

லட்சத்து 55 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.