ECONOMY

ஜூட்டெலோ மோசடி திட்டம் தொடர்பாகக் காவல்துறை 220 புகார்களைப் பெற்றுள்ளது

8 டிசம்பர் 2022, 8:08 AM
ஜூட்டெலோ மோசடி திட்டம் தொடர்பாகக் காவல்துறை 220 புகார்களைப் பெற்றுள்ளது

கோலாலம்பூர், டிச.8: கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தமாக RM84.5 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளச் ஜுட்டெலோ (Zuttelo) மோசடி திட்டம் தொடர்பாக 220 அறிக்கைகளை பிடிஆர்எம் (PDRM) பெற்றுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் மோசடி நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. அதில் ஈடுபடும் நபர்கள் மீது வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) மூலம் தனது தரப்பு விசாரணை நடத்தி வருவதாகக் மலேசிய காவல்துறை செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் கூறினார்.

"இந்த முதலீட்டுத் திட்டம் USD630 முதல் USD12,700 வரையிலான முதலீட்டுத் தொகைகளுடன் ஒன்பது முதலீட்டுப் பேக்கேஜ்களை வழங்குகிறது, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் குறைந்தபட்சம் 16.5 சதவிகிதம் மாத வருமானம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது" என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இத்திட்டத்தில், ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் www.8liga.net இணையப்பக்கத்தின் வழி பதிவு செய்து ரொக்கம் அல்லது கிரிப்டோகரன்சியில் மூலம் முதலீடு செய்யலாம் என்றார்.

குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக நூர்சியா கூறினார், மேலும் பி.டி.ஆர்.எம் பொதுமக்களை எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும், எந்த முதலீட்டு திட்டத்திலும் பங்கேற்கும் முன் செமாக் முலே, பேங்க் நெகாராவின் மலேசியாவின் எச்சரிக்கை பட்டியல் மற்றும் மலேசிய செக்யூரிட்டி கமிஷன் போன்ற அதிகாரப்பூர்வ மூலங்களை நாடவும் என நினைவூட்டியது.

முன்னதாக, மலேசிய சர்வதேச மனிதாபிமான அமைப்பின் பொதுச்செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிம், முதலீட்டு மோசடியால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 3 பில்லியன் ரிங்கிட் இழப்பு நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.