ECONOMY

பிங்காஸ் திட்டத்திற்கு வெ.10.8 கோடி ஒதுக்கீடு- 30,000 பேர் மாதம் 300 வெள்ளி பெறுவர்

25 நவம்பர் 2022, 11:55 AM
பிங்காஸ் திட்டத்திற்கு வெ.10.8 கோடி ஒதுக்கீடு- 30,000 பேர் மாதம் 300 வெள்ளி பெறுவர்

ஷா ஆலம், நவ 25- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு மாநில அரசு வரும் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 10 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வசதி குறைந்த குடும்பங்களுக்கு மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்க வகை செய்யும் இந்த திட்டத்தின் மூலம் 30,000 பேர் வரை பயனடைவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டு மத்தியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கடந்த அக்டோபர் மாதம் வரை 22,000 பேர் பயனடைந்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதாகவும் தகுதி உள்ள மனுதாரர்களுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.