ECONOMY

மலேசியாவின் 10ஆவது பிரதமருக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்தது.

24 நவம்பர் 2022, 9:13 AM
மலேசியாவின் 10ஆவது பிரதமருக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்தது.

ஷா ஆலம், நவ 24- 10 வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளப் பக்காத்தான் ஹராப்பான்

தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அடுத்து ஆண்டு நம் நாட்டிற்கு சவால்கள் நிறைந்த ஆண்டாகும். ஆகவே, நாட்டை

வழி நடத்த தம்பூன் எம்.பிக்கு உதவ அவரது நிர்வாகமும் தயாராக உள்ளது என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

யார் பிரதமரானாலும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம், கோவிட்-19 பரவல் மற்றும் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது நாங்கள் அதை நிரூபித்துள்ளோம்.

மாநிலத்திற்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான நெருங்கிய உறவு, நிர்வாகத்தையும்,

கலந்துரையாடல்களையும் மற்றும் சமநிலையான முடிவுகளை எடுக்கும் நடவடிக்கையும்

எளிதாக்குகிறது. இது அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்கக் கூடியது என்பதை அவர் இன்று சிலாங்கூர் சட்டமன்ற கூட்ட அவைக்கு வெளியில் ( லாபியில்) சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அமிருடின், புதிய

அமைச்சரவையில் இணைவீர்களா அல்லது மாநிலங்களவையில் நிர்வாகத்தில் நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது.

முதல் சிலாங்கூர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால்

தனிப்பட்ட முறையில் நான் சிலாங்கூர் நிர்வாகத்தில் இருக்க ஆர்வமாக உள்ளேன் என அவர் பதிலளித்தார். மேலும், மாநிலங்கள் அளவில் சிறப்பாக செயல் பட்டால், நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட முடியும் என குறிப்பிட்டார்.

யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாசுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா இன்று மாலை மணி 5 க்கு இஸ்தானா நெகாரா வில் அன்வார் அவர்களைப் பிரதமராக நியமிக்கும் சடங்குகள் நடத்த  ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.