ECONOMY

RM500,000 கோடி செலவு செய்த விவரங்களை மொகிடின் மக்களுக்கு விளக்க வேண்டி அன்வார் வலியுறுத்தினார்

17 நவம்பர் 2022, 5:56 AM
RM500,000 கோடி செலவு செய்த விவரங்களை மொகிடின் மக்களுக்கு விளக்க வேண்டி அன்வார் வலியுறுத்தினார்

பெட்டாலிங், நவம்பர் 17: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் -19 தொற்று நோய்களின் போது அரசாங்க செலவில் RM500,000 கோடி பயன்படுத்தியதை டான்ஸ்ரீ மொகிடின் யாசின் சத்தியம் செய்து மறைக்க முற்படக்கூடாது.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நாடு, ஆட்சி மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விரிவாக விளக்கப்பட வேண்டும் என்றார்.

“இன்று மொகிடின் அரசாங்கப் பணத்தை எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.”

“உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். சத்தியம் செய்வது கொஞ்சம் எளிது. முடிந்தால், அது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும், ”என்று சிலாங்கூர் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரத்தில் நேற்று அவர் ஆற்றிய உரையில் கூறினார்.

முன்னதாக, பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான அவர், தனது நிர்வாகத்தின் போது அரசாங்கப் பணத்தை ஒரு காசு கூட பயன்படுத்த வில்லை என்று சத்தியம் செய்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.