ECONOMY

சிப்பாங்கில் உள்ள சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் இளைஞர்களைக் கவரும் 15 நடவடிக்கைகள் வழங்குகிறது

29 அக்டோபர் 2022, 8:38 AM
சிப்பாங்கில் உள்ள சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் இளைஞர்களைக் கவரும் 15 நடவடிக்கைகள் வழங்குகிறது

ஷா ஆலம், அக் 29: சிப்பாங் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் (ஜேஎஸ்பி) நிகழ்ச்சியின் இரண்டு நாட்களிலும் இளைஞர்களைக் கவரும் வகையில் 15 நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது.

புஷ்-பைக் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற இளைஞர் அணித் தலைவர் டிங்கில் கைரில் இஸ்ஸத் நோர்டின் கூறினார்.

"சிப்பாங் மாவட்டத்தில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை செயல்படுத்தியதை சிலாங்கூர் சட்டமன்ற இளைஞர் இயக்கம் வரவேற்கிறது.

"ஜேஎஸ்பி இந்த முறை 8வது தொடர் திட்டம் ஆகும், இது சமூகத் தலைவர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களைக் கண்டறிய சிறந்த தளமாகும்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட  திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட மக்கள் உதவிப் திட்டம் இன்றும் நாளையும் சிப்பாங்கில் நடைபெறுகிறது.

முன்னதாக ஐந்து மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள், இலவச உடல் மருத்துவ சோதனைகள்,  அடிப்படை உணவுப் பொருட்களின் மலிவு விற்பனை, கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.