ECONOMY

மாணவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர்களை சந்திக்க அமைச்சர் தயாராக உள்ளார்

17 அக்டோபர் 2022, 6:37 AM
மாணவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர்களை சந்திக்க அமைச்சர் தயாராக உள்ளார்

கோலாலம்பூர், அக் 17: கற்றல் பாடத்திட்டம், அதிக எடை கொண்ட புத்தக பைகள் பிரச்சினை மற்றும் வகுப்பில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் ஆசிரியரின் செயல்களை தொடர்ந்து ஒழுக்க கட்டுப்பாடு கடிதம் பெற்றதாகக் கூறும் ஆசிரியரை சந்திக்க மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் தயாராக உள்ளார்.

ஆசிரியர் முகமது ஃபட்லி முகமது சல்லே எழுப்பிய விஷயத்தைப் பற்றி மேலும் அறிய இந்த சந்திப்பு தனக்கு உதவும் என்று ராட்ஸி பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.

கோம்பாக்கில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் கணித ஆசிரியர் முகமது ஃபட்லி, கற்றல் பாடத்திட்டம் மிகவும் உயர்ந்தது அல்லது பொருத்தமற்றது என்று அவர் நம்பும் பாடத்திட்டம் குறித்து தனது கருத்தை கூறியதற்காக பணி நீக்கம் , அல்லது பதவி இறக்கம் போன்ற எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், முகமது ஃபட்லி தனது சமீபத்திய பேஸ்புக் செய்தியில் விரைவில் கல்வி அமைச்சர் ராட்ஸியை சந்திக்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.