ECONOMY

15வது பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கும் காலத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கிறது

4 அக்டோபர் 2022, 9:45 AM
15வது பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கும் காலத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கிறது

கோலாலம்பூர், 4 அக்: 15வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலத்தை முந்தைய பொதுத் தேர்தலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை என்ற நிலையை  தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறும் என பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

இந்த காலக்கெடுவை நீட்டிப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்க முடியும் என அவர் இன்று நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

15வது பொதுத் தேர்தலிலும் மற்றும் அதற்கு அப்பால் அதிக வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கும் வாக்களிப்பு செயல்முறையின் வெளிப்படைத்தன்மைக்கான உத்தரவாதம் அளிப்பதற்கும் தேர்தல் ஆணையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் (Pejuang-Jerlun) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.