ECONOMY

சிப்ஸ் வர்த்தக உச்சநிலை மாநாடு- இலவச நுழைவு கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

3 அக்டோபர் 2022, 8:06 AM
சிப்ஸ் வர்த்தக உச்சநிலை மாநாடு- இலவச நுழைவு கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், அக் 3 - சிலாங்கூர் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி (சிப்ஸ் 2022) வரும் அக்டோபர் 6 முதல் 9 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கே.எல்.சி.சி.) நடைபெறவுள்ளது.

இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் வாயிலாக சிலாங்கூர் அரசு  நடத்தும் இந்த எட்டாவது வர்த்தக உச்ச நிலை மாநாட்டிற்கான பதிவு இப்போது பொது மக்களுக்கும் வர்த்தக பார்வையாளர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.

"நாளைக்கு அப்பால்" என்ற கருப்பொருளிலான இந்த உச்சநிலை மாநாடு 35 கோடி வெள்ளி வரையிலான பரிவர்த்தனையை ஈட்டுவதையும் சுமார் 30,000 பங்கேற்பாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான இலவச நுழைவுக் கார்டுகளுக்கு பொது மக்கள் விண்ணப்பிக்கலாம் இந்த மாநாட்டை சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அக்டோபர் 6 ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ளார்.

மந்திரி என்ற கருப்பொருளிலான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் முதலீடு, தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்துகொள்வார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.