ECONOMY

எந்த நேரத்திலும் 15வது பொதுத் தேர்தல் எதிர்கொள்ள ஹராப்பான் தயார்

25 செப்டெம்பர் 2022, 12:16 PM
எந்த நேரத்திலும் 15வது பொதுத் தேர்தல் எதிர்கொள்ள ஹராப்பான் தயார்

கோம்பாக், செப் 25: 14 வது மக்களவையின் பதவிக் காலம் முழுமையாக முடியும்  முன் அடுத்த தேர்தலுக்கு அவசரப்படக் கூடாது என பல எச்சரிக்கைகள் விட்டிருந்தாலும்.  அரசாங்க தரப்பு  அடுத்த தேர்தலுக்கான  அவசரத்தில், எந்த நேரத்தில் தேர்தலை நடத்தினாலும், அதை எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) தயாராக உள்ளது.

சில கட்சிகள் 15வது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவது ஒழுக்கக்கேடான வழியில் அதிகாரத்தையும் பதவியையும் அபகரிக்கும் நோக்கத்தில் இருப்பதாக தான் நம்புவதாக சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூரைச் சேர்ந்த டத்தோ மந்திரி புசார் நேற்றிரவு இங்குள்ள ராவாங்கில் உள்ள கம்போங் சுங்கை தெரோந்தோங்கில் மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) செலாயாங் கிளையின் இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசினார்.

நாட்டை மீட்டெடுப்பதற்கான உறுதிப்பாட்டையும், சீர்திருத்தத்திற்கான போராட்டத்தையும் கட்சி உறுப்பினர்கள் தொடருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை  தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.