ECONOMY

கோவிட்-19: நாட்டில் நேற்று 2,245 பேர் பாதிப்பு - 12 பேர் மரணம்

23 செப்டெம்பர் 2022, 8:25 AM
கோவிட்-19: நாட்டில் நேற்று 2,245 பேர் பாதிப்பு - 12 பேர் மரணம்

ஷா ஆலம், செப் 23- நாட்டில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கை  நேற்று 2,245 ஆகப் பதிவானது.  கடந்த புதன்கிழமை இந்த எண்ணிக்கை  2,111 ஆக இருந்தது.

நேற்று பதிவான சம்பவங்களில் ஆறு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்,19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 26 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட்-19 நேற்று தொடர்புடைய  12 மரணங்கள்  பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்ந்து நோயினால்  இறந்தவர்கள் எண்ணிக்கை 36,342 ஆகப் பதிவாகியுள்ளது.

நேற்று  1,901 பேர்  குணமடைந்த வேளையில் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 4,764,219 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 25,659 பேர் நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர் நோக்கியிருந்தனர். அவர்களில் 95.2 சதவீதம் (24,440 பேர்) வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில், 4.5 சதவீதம் பேர் (91,163 ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன, 0.2 சதவீதம் (55 பேர்) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.