ECONOMY

பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 187 பேர் மாநில அரசின் விருதுகளைப் பெற்றனர்.

22 செப்டெம்பர் 2022, 3:48 AM
பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 187 பேர் மாநில அரசின் விருதுகளைப் பெற்றனர்.
பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 187 பேர் மாநில அரசின் விருதுகளைப் பெற்றனர்.

ஷா ஆலம், செப் 22- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு பெட்டாலிங் மற்றும் கிள்ளான் பகுதியைச் சேர்ந்த மொத்தம் 187 பேர் உயரிய விருதுகளைப் பெற்றனர்.

இங்குள்ள  ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் சார்பாக தெங்கு அட்மிரல் சிலாங்கூர் தெங்கு சுலைமான் ஷா அல்ஹாஜ் இந்த விருதுகளை வழங்கினார்.

மொத்தம் 31 பேருக்கு பி.பி.டி. விருதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரப் பதக்கம் (PPT), சிறந்த சேவைப் பதக்கம் 40 பேருக்கு பி.பி.சி. விருதும் 111 பேருக்கு பி.ஜே.கே. விருதும் ஐவருக்கு பி.பி.எஸ். விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களைச் செய்யும் நபர்களுக்கு பி.பி.டி. விருது வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பி.பி.சி. விருது துணைக் குழுவில் சிறந்து விளங்கும் மற்றும் மாநில அரசாங்கத்தில் குறைந்தது ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட காலம் பணியாற்றிய மற்றும் சிலாங்கூருக்குப் பங்களிப்புச் செய்த, விடாமுயற்சி, கீழ்ப்படிதல், சிறப்புத் திறன்கள் மற்றும் நல்ல பண்புகளைக் கொண்ட நபர்களுக்கு பி.ஜே.கே. விருது வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் அரசாங்கத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த அல்லது பாராட்டத்தக்க நடத்தை கொண்ட அரசாங்க ஊழியர்களுக்கு பி.பி.எஸ். விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதளிப்பு நிகழ்வில் மாநிலச் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், துணை சபாநாயகர் ஹஸ்னுல் பஹாருடின் மற்றும் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.