ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 2,431ஆக உயர்வு

15 செப்டெம்பர் 2022, 6:44 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 2,431ஆக உயர்வு

ஷா ஆலம், செப் 15- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  மறுபடியும் இரண்டாயிரத்தை தாண்டியது.

நேற்று மொத்தம் 2,431 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் எட்டு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 296 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த ஐந்து நாட்களாக சற்று தணிந்து இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.