ECONOMY

திருமணமாகாதோர் மற்றும் புதிதாக திருமணம் செய்தோருக்காக சிறப்பு வீடமைப்புத் திட்டம்

13 செப்டெம்பர் 2022, 4:52 AM
திருமணமாகாதோர் மற்றும் புதிதாக திருமணம் செய்தோருக்காக சிறப்பு வீடமைப்புத் திட்டம்

கோல சிலாங்கூர் செப் 13- திருமணமாகதவர்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீடுகளை மாநில அரசு நிர்மாணிக்கவுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, அம்பாங், சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலம்  ஆகிய இடங்களில் இந்த வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட தகுதியைக் கொண்டிராதவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக மாநில அரசே இத்திட்டத்தை முழுமையாக கையாளும் என்று அவர் சொன்னார்.

சிக்கனம் என்ற பெயரில் ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தினர் இத்தகைய வீடுகளைப் பெற முயல்வதை தாங்கள் தடுக்க விரும்புகிறோம். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றார் அவர்.

இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை திருமணமாகாதோர் மற்றும் திருமணமாகி ஒரு குழந்தையைக் கொண்டிருப்போர் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்குள்ள தாமான் சுங்கை யூவில் மலிவு விலை வீடுகளை வாங்கிய 10 பேருக்கு சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.