ECONOMY

புதிய கோவிட்-19 எண்ணிக்கை 2,226ஆகப் பதிவு- ஒருவர் மரணம்

9 செப்டெம்பர் 2022, 7:04 AM
புதிய கோவிட்-19 எண்ணிக்கை 2,226ஆகப் பதிவு- ஒருவர் மரணம்

ஷா ஆலம், ஆக 9- நாட்டில் நேற்று புதிய கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை 2,226 ஆகப் பதிவானது.

கடந்த புதன்கிழமை இந்த எண்ணிக்கை   2,428 சம்பவங்களாக இருந்ததாக  சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று பதிவான கோவிட்-19 சம்பவங்களில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவை என்று அது தெரிவித்தது.

இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 99 ஆயிரத்து 663 பேராக ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில்,  கோவிட்-19 தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம் நேற்று பதிவானது. இந்நோய்க்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை  36,270 ஆக உள்ளது.

நேற்று  1,894 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 47 லட்சத்து 35 ஆயிரத்து 993 பேராக ஆக அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.