ECONOMY

வங்கிகளுக்கிடையிலான ஒ.பி.ஆர். வட்டி விகிதம் 2.5 விழுக்காடு உயர்வு

9 செப்டெம்பர் 2022, 3:19 AM
வங்கிகளுக்கிடையிலான ஒ.பி.ஆர். வட்டி விகிதம் 2.5 விழுக்காடு உயர்வு

கோலாலம்பூர், செப் 9 - வங்கிகளுக்கான ஒ.பி ஆர். வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து 2.5 விழுக்காடாக  பேங்க் நெகாரா மலேசியா உயர்த்தியுள்ளது.

மத்திய பொருளகம் தொடர்ந்து  மூன்றாவது முறையாக ஒ.பி.ஆர். விகிதத்தை உயர்த்தியுள்ளது. உலகளாவிய நிலையில் விநியோக நிபந்தனைகள் தொடர்ந்து குறைந்து வந்தாலும் பணவீக்கம் உயர்வினாலும் மூலப் பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளதோடு தொழிலாளர் சந்தையும் கடுமையாகியுள்ளதாக பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் விளைவாக மத்திய பொருளகம் தங்களது நாணய கொள்கையை சீர்படுத்தி வருவதோடு பணவீக்கத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பேங்க் நெகாராவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.