ECONOMY

5 கிலோ பாட்டில் சமையல் எண்ணெயின் உச்சவரம்பு விலை செப்டம்பர் 8 முதல் RM33.50 ஆக குறைகிறது

1 செப்டெம்பர் 2022, 9:55 AM
5 கிலோ பாட்டில் சமையல் எண்ணெயின் உச்சவரம்பு விலை செப்டம்பர் 8 முதல் RM33.50 ஆக குறைகிறது

புத்ராஜெயா, செப்டம்பர் 1: செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 7 வரை ஐந்து கிலோ பாமாயில் பாட்டிலின் உச்சவரம்பு விலை RM33.50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று பணவீக்கத்திற்கு எதிரான சிறப்பு ஜிஹாட் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ அன்னுார் மூசா தெரிவித்தார்.

மூன்று கிலோ சமையல் எண்ணெய் பாட்டில்களின் விலை RM21.70ல் இருந்து RM21.10 ஆகவும், இரண்டு கிலோ பாட்டில்கள் RM14.70ல் இருந்து RM14.30 ஆகவும், ஒரு கிலோ பாட்டில்கள் RM7.70ல் இருந்து RM7.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

"இந்தக் குறைவு ஆகஸ்ட் மாதத்தில் கச்சா பாமாயிலின் (சிபிஓ) விலையை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு மெட்ரிக் டன் ரிங்கிட் 4,169 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.