ECONOMY

தீவிர பூப்பந்து ரசிகரால் மிரட்டல்- விளையாட்டு வர்ணனையாளர் போலீசில் புகார்

1 செப்டெம்பர் 2022, 4:30 AM
தீவிர பூப்பந்து ரசிகரால் மிரட்டல்- விளையாட்டு வர்ணனையாளர் போலீசில் புகார்

ஷா ஆலம், செப் 1- தேசிய ஒற்றையர்  பிரிவு பூப்பந்து விளையாட்டாளரின் தீவிர ரசிகரிடமிருந்து மிரட்டல் பெறப்பட்டது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விளையாட்டு வர்ணனையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் நேற்று பின்னிரவு 1.00 மணியளவில் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகாரை செய்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி “ஆண்டிமீடியாபாபி“ எனும் இண்ஸ்டாகிராம் வாயிலாக தாம் அந்த மிரட்டலைப் பெற்றதாக அந்த நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்தால் இந்த பதிவு தொடர்பில் தாம் போலீசில் புகார் செய்ய முடிவெடுத்ததாக அவர் கூறியுள்ளார் என இக்பால்  தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தேசிய பூப்பந்து வீரர் லீ ஜீ ஜியாவின் ஆட்டத் திறன் குறித்து சம்பந்தப்பட்ட நபர் விமர்சனம் செய்துள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.