ECONOMY

சுக்மா 2022: சிலாங்கூர் 40க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் பெற நம்பிக்கை கொண்டுள்ளது

30 ஆகஸ்ட் 2022, 8:36 AM
சுக்மா 2022: சிலாங்கூர் 40க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் பெற நம்பிக்கை கொண்டுள்ளது

சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 30: அடுத்த மாதம் நடைபெற உள்ள 20வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) சிலாங்கூர் அணி 40க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் பெற முடியும் என்று மாநில விளையாட்டு கவுன்சில் (எம்எஸ்என்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு இதே விளையாட்டுப் போட்டிகளில் சிலாங்கூர் 50க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றதால். இந்த  இலக்கு வைக்கப்பட்டதாக அதன் செயல்முறை இயக்குநர் முகமது நிஜாம் மர்ஜுகி கூறினார்.

“மாநில அரசு 40 தங்கம், 40 வெள்ளி மற்றும் 40 வெண்கலத்தை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இன்னும் அதிகமாக வேண்டும் மற்றும் பதக்கங்கள் வழங்க கூடிய விளையாட்டு வீரர்களின் மதிப்பீட்டை நாங்கள் செய்துள்ளோம்.

குத்துச்சண்டை, தடகளம், ரக்பி, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் பல விளையாட்டுகள் சம்பந்தப்பட்ட 180 விளையாட்டு வீரர்களுக்கு அவர் செய்தியை வழங்கினார்.

முன்னதாக, எம்எஸ்என் சிலாங்கூர் செப்டம்பர் 16 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்ட 20வது சுக்மாவில் 40 தங்கப் பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில் இருக்க வேண்டும் என்ற இலக்குடன் இருந்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி இந்த முறை நடைபெற உள்ள சுக்மாவில் மொத்தம் 31 வகையான விளையாட்டுகளையும் 445 நிகழ்வுகளும் நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.