ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 3,206 பேர் பாதிப்பு- எண்மர் மரணம்

26 ஆகஸ்ட் 2022, 5:17 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 3,206 பேர் பாதிப்பு- எண்மர் மரணம்

ஷா ஆலம், ஆக 26-  நாட்டில் நேற்று புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை  மூவாயிரத்தைக் கடந்து  3,206 ஆகப் பதிவானது. இவற்றில் நான்கு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவையாகும்.

இந்நோய் காரணமாக நேற்று மொத்தம் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ்  அகப்பக்கம் கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மொத்தம்  36,185 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  47 லட்சத்து 68 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி 2,180 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 96 ஆயிரத்து 221 ஆக உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.