ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 3,516 பேர் பாதிப்பு- 15 உயிரிழப்புகள் பதிவு

18 ஆகஸ்ட் 2022, 6:07 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 3,516 பேர் பாதிப்பு- 15 உயிரிழப்புகள் பதிவு

ஷா ஆலம், ஆக 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் 3,516 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,429 ஆக இருந்தது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து  கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 32 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 41,701 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40,034 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 41 பேர் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் 1,534 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களில் 92 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 62.6 விழுக்காட்டு கட்டில்கள் பயன்பாட்டில் உள்ள வேளையில் அவற்றில் 24.7 விழுக்காட்டு கட்டில்களில் கோவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று 15 பேர் பலியாகினர். இதனுடன் சேர்த்து இந்நோயினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,117 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.