ECONOMY

சுங்கை கண்டிஸ் மற்றும் பண்டார் பாரு கிள்ளானில் நாளை இலவச சுகாதார பரிசோதனை

6 ஆகஸ்ட் 2022, 12:58 PM
சுங்கை கண்டிஸ் மற்றும் பண்டார் பாரு கிள்ளானில் நாளை இலவச சுகாதார பரிசோதனை

ஷா ஆலம், ஆகஸ்ட் 6: சிலாங்கூர் அரசாங்கம் நோய்க்கான ஆரம்ப அபாயத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்துள்ள இலவச சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் நாளை இரு மாநில சட்டமன்றத்தில் தொடரும்.

சுங்கை கண்டிஸ் சட்டமன்றத்தில் சிலாங்கூர் சாரிங் நிகழ்ச்சி ஷா ஆலம் கெமுனிங் உத்தாமா நகர மன்ற மண்டபத்திலும், பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்றத்தில் கிள்ளான் பரேட் ஷாப்பிங் மாலின் முதல் தளத்தில் நடைபெறும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூற்றுப்படி, இந்த முயற்சியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் அல்லது பதிவுகளை செலங்கா செயலி மூலம் பதிவு செய்யலாம்.

"செந்தோசா, சுங்கை கண்டிஸ் மற்றும் பண்டார் பாரு கிள்ளானில் வசிப்பவர்களுக்கு இந்த வார இலவச மருத்துவ பரிசோதனை இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் பிறவற்றின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும்" என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.